Nagaratharonline.com
 
காரைக்குடி செல்லும் ஆம்னி பஸ்சில் ரூ.2 1/2 லட்சம் அபேஸ்  Dec 16, 11
 
சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் சண்முகம் செட்டியார். இவர் பேப்பர் கம்பெனி நடத்தி வருகிறார். சண்முகம் செட்டியார் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நிலம் வாங்கியிருந்தார். இதற்கு பணம் கொடுப்பதற்காக ரூ.4 லட்சத்திற்கான காசோலை ரூ.2 1/2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை ஒரு பையில் வைத்துக் கொண்டு நேற்று இரவு சென்னையில் இருந்து காரைக்குடியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு செல்வதற்காக ஒரு தனியார் ஆம்னி பஸ்சில் வந்தார்.

பஸ்சில் அவர் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு மர்ம ஆசாமி சண்முக செட்டியார் வைத்திருந்த பையில் இருந்த 2 1/2 லட்சம் பணத்தை அபேஸ் செய்துவிட்டு தப்பி விட்டான்.

காரைக்குடி பஸ் நிறுத்தத்தில் பஸ் வந்ததும் சண்முகசெட்டியார் பணப்பையை பார்த்தபோது பை கிழிக்கப்பட்டு, பையில் இருந்த பணம் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து சண்முகசெட்டியார் காரைக்குடி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

source : Maalaimalar