Nagaratharonline.com
 
காரைக்குடியில் பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல்; என்ஜினீயர் கணவர் கைது  Dec 1, 09
 
காரைக்குடி, டிச. 1-

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டி.டி.நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் செல்வி. அரசு ஆஸ்பத்திரி டாக்டர். இவர் காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்து உள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

எனக்கும் டி.டி. நகரை சேர்ந்த என்ஜினீயர் பாலசுப்பிமணியன் என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது எனது பெற்றோர் 30 பவுன் நகை ரூ.1 லட்சம் சீர்வரிசை கொடுத்தனர்.

திருமணம் முடிந்த நாளில் இருந்து எனது கணவர் பாலசுப்பிரமணியன் என்னை சித்ரவதை செய்தார். இதன்காரணமாக நாங்கள் தற்போது பிரிந்து வாழுகிறோம்.

நேற்று எனது செல்போனுக்கு பாலசுப்பிர மணியன் பேசினார். அப்போது முன்பகை காரணமாக என்னை கொன்றுவிடுவதாக மிரட்டினார். எனவே இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தா வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் பாலசுப்பிரமணியனை கைது செய்தார்.


Source: Malaimalar 1/12/09