Nagaratharonline.com
 
பொன்னமராவதி கற்பக விநாயகர் கோயில் குடமுழுக்கு  Dec 16, 11
 
பொன்னமராவதி கற்பக விநாயகர் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அமரகண்டான் ஊரணியின் தென்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் அண்மையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
குடமுழுக்கையொட்டி, புதன்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், முதல் கால யாகபூஜை நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை நடைபெற்றது. தொடர்ந்து, அன்று காலை 11 மணியளவில் கோயில் கும்பத்தில் புனித நீர் உற்றப்பட்டு குடமுழுக்கு செய்விக்கப்பட்டது.
குடமுழுக்கு ஏற்பாடுகளை எம்கேகேஎம். சேதுராமன் செட்டியார் மற்றும் கோயில் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
குடமுழுக்கையொட்டி, அன்னதானம் நடைபெற்றது. திரளான பொதுமக்கள் குடமுழுக்கில் பங்கேற்றனர்.




source : Dinamani