Nagaratharonline.com
 
ஊழியர்கள் இல்லாத கண்டரமாணிக்கம் மின்வாரிய அலுவலகம்  Dec 13, 11
 
கண்டரமாணிக்கம் மின்வாரிய அலுவலக கட்டுப்பாட்டில் பட்டமங்களம், சொக்கநாதபுரம்,ஆலங்குடி உள்ளிட்ட 24 ஊராட்சிகளில் 9ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. தற்போது அவரும் விடுப்பில் சென்று விட்டதால் அலுவலகம் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. ஒரு வருடமாக இப்பகுதியிலுள்ள வீடுகளில் மின் கணக்கீடு செய்யப்படாமல் குறைந்தபட்ச கட்டணத்தையே கட்டி வருகின்றனர்.

தாங்கள் பயன்படுத்தும் மின் அளவை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக கருதி இப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தில் தகராறு செய்கின்றனர். போதிய பணியாளர்கள் இல்லாததால் மின் கட்டணம் செலுத்த வந்தாலும் பணத்தை கட்ட முடியாமல் மக்கள் திரும்பி சென்று மீண்டும் பணம் கட்ட பல நாட்கள் அலைய வேண்டிய நிலை உள்ளது. ஊழியர்கள் இல்லாமல் பணிகள் முடங்கி கிடக்கும் இந்த மின்வாரிய அலுவலகத்திற்கு போதிய பணியாளர்கள் நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

source : Dinamalar