Nagaratharonline.com
 
பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத நடராஜபுரம்-காளையார்கோயில் ரோடு  Dec 13, 11
 
நடராஜபுரம்-காளையார்கோவில் ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நடராஜபுரத்திலிருந்து காளையார்கோவிலுக்கு சாத்தரசன்பட்டி வழியாக செல்ல வேண்டும் என்றால் 15 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டும். நடராஜபுரத்திலிருந்து அய்யனார்குளம் வழியாக காளையார்கோவில் செல்வதற்கு 4 கி.மீ., தூரம் மட்டுமே. பாகனேரி,சொக்கநாதபுரம்,நகரம்பட்டி உள்ளிட்ட ஊராட்சியை சேர்ந்தவர்கள் ஒன்றிய அலுவலகத்திற்கு செல்ல சுற்றிச் செல்ல வேண்டும்.

இப்பகுதியிலிருந்து காளையார்கோவிலுக்கு பஸ் போக்குவரத்தும் கிடையாது. ஏற்கனவே ரோடு நல்ல நிலையில் இருந்த போது இப்பகுதி மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தினர்.ரோடு மிகவும் மோசமாக இருப்பதால் இந்த ரோட்டை பயன்படுத்த முடியாமல் மக்கள் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. மக்கள் எளிதாக சென்றுவரக்கூடிய அளவிற்கு இந்தரோட்டை புதுப்பித்து பஸ் போக்குவரத்திற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

source : Dinamalar