Nagaratharonline.com
 
காரைக்குடி அருகே முகவரி கேட்பது போல் நடித்து நகை பறிப்பு “மர்ம” நபர்கள் துணிகரம்  Dec 1, 09
 
காரைக்குடி, நவ. 25-

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் மேலரத வீதியை சேர்ந்தவர் காளி முத்து (வயது70). இவர் நேற்று மாலை காற்று வாங்குவதற்காக தனது வீட்டு முன்பு நின்றார்.

அப்போது “மர்ம” நபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் காளிமுத்துவிடம் ஒரு துண்டு சீட்டை காண்பித்து முகவரி கேட்டனர். அதற்கு அவர் எனக்கு தெரியாது என்றார்.

அக்கம் பக்கம் பார்த்த “மர்ம” நபர்கள் காளிமுத்து கழுத்தில் கிடந்த 3? பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். உஷா ரான கொள்ளையர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
வலைவீச்சு

இது குறித்து பள்ளத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து “மர்ம” நபர்களை தேடிவருகின்றனர்.

Source: Malaimalar 1/12/09