Nagaratharonline.com
 
சனிப் பெயர்ச்சி : திருநள்ளாறில் சிறப்பு ஏற்பாடுகள்  Dec 9, 11
 
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் டிசம்பர் 21-ம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

தர்ம தரிசனம் முதல் கட்டண தரிசனம் வரை பல்வேறு வகையில் தரிசனத்தில் குறைபாடு, காலதாமதம் இல்லாத வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருநள்ளாறு கோயில் மற்றும் நளன் குளம் பகுதிகளில் 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் இருந்தவாறு போலீஸôரும், தனிக் குழுவினரும் கேமரா பதிவை கண்காணிப்பார்கள். பாதுகாப்புக்கு 1500 போலீஸôர் வரவழைக்கப்படுகின்றனர்.

நாகூர் - காரைக்கால் இடையிலான புதிய அகல ரயில் பாதையில் பல்வேறு கட்ட சோதனை பணிகள் நடைபெற்று வருகின்றன.
11 கிலோ மீட்டர் தொலைவுடைய இந்த பாதையில் டிசம்பர் 13-ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இவரது ஆய்வில் திருப்தி தெரிவித்தால் மட்டுமே ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான தேதியை அரசு அறிவிக்கும் என கூறப்படுகிறது.