Nagaratharonline.com
 
புது​வ​யல் கால்​நடை மருந்​த​கத்​தில் அடிப்​படை வசதி ஏற்​ப​டுத்​தப்​ப​டுமா?  Nov 30, 09
 
​காரைக்​குடி,​ நவ. 27:​ ​ சிவ​கங்கை மாவட்​டம்,​ காரைக்​குடி அருகே புது​வய​லில் பல ஆண்​டு​க​ளாக கால்​நடை மருந்​த​கக் கிளை அடிப்​படை வச​தி​கள் எது​வுமே இல்​லா​மல் ​ இயங்​கி​வ​ரு​கி​றது.

​ விவ​சா​யத்​துக்​குத் துணைத் தொழில்​க​ளாக கால்​நடை வளர்ப்​புத் தொழில்​களை அரசு ஊக்​கப்​ப​டுத்​தி​வ​ரும் நிலை​யில்,​ கழி​வறை நாற்​றத்​து​டன் இந்​தக் கிளை நிலை​யம் உள்​ளது. ​

​ ​ சாக்​கோட்டை ஒன்​றி​யத்​தில் கண்​ட​னூர்,​ பீர்க்​க​லைக்​காடு என இரு கால்​நடை மருந்​த​கங்​கள் உள்​ளன. புது​வ​யல்,​ கோட்​டை​யூர்-​வேலங்​குடி உள்​பட 12 கால்​நடை மருந்​த​கக் கிளை நிலை​யங்​கள் உள்​ளன. ​

​ சாக்​கோட்டை ஒன்​றி​யத்​தில் உள்ள மருந்​த​கங்​க​ளுக்கு 2 மருத்​து​வர்​கள் இருக்க வேண்​டும். ஆனால்,​ பீர்க்​க​லைக்​காடு மருந்​த​கத்​தில் பணி​யாற்​றிய மருத்​து​வர் பதவி உயர்​வு​பெற்​றுச் சென்​று​விட்​ட​தால்,​ கண்​ட​னூர் மருத்​து​வரே ஓராண்​டாக பொறுப்​பேற்று வரு​கி​றார்.

​ ​ அதே​போன்று 12 கிளை நிலை​யங்​க​ளுக்​கும் ஆய்​வா​ளர்​கள் 12 பேர் ​ இருக்க வேண்​டும். ஆனால் 4 பேர் மட்​டுமே உள்​ள​னர். ​

​ ​ ​ சாக்​கோட்டை ஒன்​றி​யத்​தில் 8 ஆயி​ரத்​திற்​கும் மேற்​பட்ட கால்​ந​டை​களை கால்​நடை மருந்​த​கத்​திற்கு கால்​நடை வளர்ப்​போர் சிகிச்சை மற்​றும் தடுப்பு ஊசி​க​ளுக்​காக அனுகி வரு​கின்​ற​னர்.

​ ​ புது​வய​லில் உள்ள கால்​நடை மருந்​த​கக் கிளை நிலை​யத்​தில் பல ஆண்​டு​க​ளாக ஆய்​வா​ளர் இல்​லா​மல் வேறு பகு​தி​யைச் சேர்ந்த ஆய்​வா​ளர்​கள் வாரத்​தில் 2 நாள்​கள் கிளை​யைத் திறப்​ப​தும் அந்த நேரத்​தில் கொண்டு வரப்​ப​டும் சில குறிப்​பிட்ட கால்​ந​டை​க​ளுக்​குத் தேவை​யான மருந்து மற்​றும் ஆலோ​ச​னை​களை கூறி​விட்​டுச் செல்​வ​தும் வழக்​க​மாக இருந்து வந்​துள்​ளது.

​ ​ ​ புது​வய​லில் நக​ரத்​தார்​கள்,​ நாட்​டார்​கள் என பல​த​ரப்​பட்ட மக்​கள் வசித்து வரு​கின்​ற​னர். இவர்​க​ளது பால் தேவை​க​ளைப் பூர்த்தி செய்ய கறவை மாடு​களை வளர்க்க பலர் ஆர்​வ​மாக உள்​ள​னர். ஆனால்,​ அவற்​றிற்கு ஏற்​ப​டும் நோய்​கள் மற்​றும் மருத்​துவ ஆலோ​சனை கிடைக்க வேண்​டும் என்​றால்,​ புது​வ​யல் கால்​நடை மருந்​த​கக் கிளை நிலை​யத்தை கால்​நடை மருந்​த​க​மாக உயர்த்தி பல அடிப்​படை வச​தி​க​ளைச் செய்ய வேண்​டும் என எதிர்​பார்க்​கின்​ற​னர்.

​ ​ புது​வ​யல் கிளை நிலை​யத்​துக்​குப் பதவி உயர்​வு​பெற்று ஆய்​வா​ளர் ஒரு​வர் தற்​போது காலை 8 மணி முதல் 12 மணி வரை பணி​யில் இருந்து வரு​கி​றார். இந்​தக் கிளை நிலை​யத்​துக்​குச் சுற்​றுச்​சு​வர் இல்லை. மின் இணைப்பு இல்லை. புதர் மண்டி பாம்பு,​ பூராண் உள்​ளிட்ட விஷ ஜந்​துக்​கள் உள்ளே புகும் சூழ்​நி​லை​யில் உள்​ளது.

​ ​ இந்​தக் கிளை நிலை​யத்​துக்கு மணி​யாப்​பட்டி,​ மணக்​குடி,​ சொலப்​பாயி,​ நட​ரா​ஜ​பு​ரம்,​ காம​ரா​ஜர் நகர்,​ வேங்​கா​வ​யல்,​ தேவர் நகர் ஆகிய பகு​தி​க​ளைச் சேர்ந்த கால்​நடை விவ​சா​யி​கள் தங்​க​ளது கால்​ந​டை​க​ளான ஆடு,​ மாடு மற்​றும் கோழி​கள் என இவற்​றுóக்கு தரப்​ப​டும் நோய்த் தடுப்பு மருந்து மற்​றும் ஊசி,​ கறவை மாடு​க​ளுக்​கான சினைக் கரு​வூóட்​டல் போன்​ற​வற்​றைப் பெற்​றுக் கொள்​ள​லாம்.

​ ​ ஆனால்,​ இதெல்​லாம் தொடர்ந்து நடை​பெற வேண்​டு​மென்​றால் இந்​தக் கிளை நிலை​யத்​திற்கு முத​லில் மின் இணைப்​புத் தர வேண்​டும். சுற்​றுச்​சு​வர் எழுப்​பி​யும்,​ ஆய்​வா​ளர் பயன்​ப​டுத்​திக் கொள்ள கழிப்​பறை வச​தி​யும் செய்​து​தர வேண்​டும். இதற்கு சம்​பந்​தப்​பட்ட அதி​கா​ரி​கள் உட​ன​டி​யாக இதனை பார்​வை​யிட வேண்​டும்.

​ ​ இது​கு​றித்து கால்​நடை மருந்​தக அதி​காரி ஒரு​வர் கூறி​யது:​ சாக்​கோட்டை ஒன்​றி​யத்​தில் கறவை மாடு​கள் கலப்​பி​னம்,​ நாட்டு மாடு​களை வளர்க்​கின்​ற​னர். இப் பகு​தி​யில் பால் உற்​பத்​தி​யா​ளர்​கள் ஒன்​றி​யம் இல்லை. இத​னால் தங்​க​ளது வீட்​டுத் தேவைக்கு மட்​டுமே கறவை மாடு​களை சிலர் வளர்த்து வரு​கின்​ற​னர்.

​ ​ பால் உற்​பத்​தி​யா​ளர்​கள் ஒன்​றி​யம் முன்​னர் இயங்கி வந்​தி​ருக்​கி​றது. மீண்​டும் பால் உற்​பத்​தி​யா​ளர் ஒன்​றி​யம் செயல்​ப​டுóத்​தி​னால் வியா​பார ரீதி​யாக விவ​சா​யி​கள் கறவை மாடு​களை வளர்க்க முன் வரு​வார்​கள்.

​ ​ திட்​டங்​க​ளுக்கு ஏற்ப ஆண்​டுக்கு சுமார் 15 கால்​நடை மருóத்​துவ முகாம்​கள் நடத்தி பொது​மக்​க​ளின் கால்​ந​டை​க​ளுக்கு உரிய சிகிச்சை மற்​றும் ஆலோ​ச​னை​களை வழங்​கி​வ​ரு​கி​றோம். பற்​றாக்​கு​றை​யாக உள்ள ஆய்​வா​ளர்​கள் நிய​மிக்க வேண்​டும்,​

​ ​ பீர்க்​க​லைக்​காடு,​ கண்​ணங்​குடி,​ திருப்​பத்​தூர் ஆகிய மருந்​த​கங்​க​ளில் மருத்​து​வர்​கள் நிய​மிக்​கப்​பட வேண்​டும் என்​றார்.


Source:Dinamani Nov 30