Nagaratharonline.com
 
திருவண்ணாமலை மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய்  Dec 3, 11
 
 
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா கார்த்திகை தீப விழா, வரும் 8 ம்தேதி நடக்கிறது. அன்று அதிகாலை, 4 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

இதற்காக, 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படும். இதற்கான நெய், மதுரை காந்தி கிராம ஊரக வளர்ச்சி துறையிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.