Nagaratharonline.com
 
பொருள்​கள் நிறுத்​தப்​பட்ட ரேஷன் அட்​டை​கள் விவ​ரம் நாளை அறி​விப்பு  Nov 28, 09
 
குடும்ப அட்டை தணிக்கை முடி​வில் பொருள் வழங்​கல் நிறுத்​தப்​பட்ட அட்​டை​கள் பட்​டி​யல்,​ திங்​கள்​கி​ழமை அந்​தந்​தப் பகு​தி​க​ளில் உள்ள நியா​ய​வி​லைக் கடை​க​ளில் ஒட்​டப்​ப​டு​கி​றது.

​ சிவ​கங்கை மாவட்ட வழங்​கல் அலு​வ​ல​கம் இது தொடர்​பாக வெளி​யிட்​டுள்ள செய்​திக்​கு​றிப்பு விவ​ரம்:​

​ வீடு​வீ​டாக குடும்ப அட்டை தணிக்கை நடை​பெற்ற போது வீடு​க​ளில் இல்​லா​த​வர்​கள் மற்​றும் முக​வரி மாறி​ய​வர்​க​ளின் குடும்ப அட்​டை​க​ளுக்கு பொருள் வழங்​கல் நிறுத்​தும் ஆணை வட்ட வழங்​கல் அலு​வ​ல​ரால் பிறப்​பிக்​கப்​பட்டு,​ 30.11.2009ல் நியா​ய​வி​லைக் கடை​க​ளில் விளம்​ப​ரப்​ப​டுத்​தப்​பட உள்​ளது.

முக​வரி மாற்​றம் மற்​றும் பிற கார​ணங்​க​ளால் இந்​தப் பட்​டிய​லில் இடம்​பெற்​றுள்ள அட்​டை​தா​ரர்​கள் மேல்​மு​றை​யீடு செய்​வ​தற்கு,​ சம்​பந்​தப்​பட்ட கடை​க​ளி​லேயே படி​வங்​கள் இல​வ​ச​மாக விநி​யோ​கிக்​கப்​ப​டும். அதனை பூர்த்தி செய்து குடும்ப அட்டை நகல் மற்​றும் இருப்​பிட ஆதா​ர​மாக வாக்​கா​ளர் அடை​யாள அட்டை நகல்,​ வீட்டு வரி ரசீது நகல்,​ வங்கி சேமிப்பு புத்​தக நகல்,​ ஓட்​டு​நர் உரிம நகல்,​ பாஸ்​போர்ட் நகல்,​ அஞ்​சல் துறை வழங்​கும் இருப்​பிட அடை​யாள அட்டை நகல் ஆகி​ய​வற்​றில் ஒன்றை இணைத்து நியா​ய​வி​லைக் கடை​யி​லேயே கொடுத்து அதற்​கான ஒப்​பு​தல் சீட்டு பெற​வே​ண​டும்.

​ மேல்​மு​றை​யீடு மனுக்​கள் 31.12.2009க்குள் கொடுக்​கப்​ப​ட​வேண்​டும். முறை​யீடு மனு கொடுத்​த​வர்​க​ளுக்கு அவர்​க​ளது முறை​யீடு மனு மீதான இறுதி ஆணை பிறப்​பிக்​கப்​ப​டும் வரை தொடர்ந்து பொருள் வழங்​கப்​ப​டும்.

மனுக்​கள் மீது நேரடி ​ விசா​ரணை செய்து உண்​மை​யில் வசிப்​ப​வர்​கள் கண்​ட​றி​யப்​பட்டு,​ அவர்​க​ளுக்கு குடும்ப அட்​டை​யில் முக​வரி மாற்​றம் செய்து கொடுத்து தொடர்ந்து பொருள் வழங்க நட​வ​டிக்கை எடுó​க​கப்​ப​டும் என அதில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.​ ​ ​ ​

source : Dinamani 28/11/09