Nagaratharonline.com
 
தேவகோட்டையில் இருபெரும் விழா  Nov 20, 11
 
தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்கத்தின் ஆண்டு விழா, ஒவியப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சங்கத் தலைவர் குமரப்பன் தலைமையில் நடந்தது.

லோட்டஸ் வெங்கிடாசலம் செட்டியார் பள்ளி தலைமையாசிரியை ராஜீ ஓவியப்போட்டி அறிக்கை வாசித்தார்.எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பரிசு வழங்கினார்.நகராட்சிதலைவர் சுமித்ரா, ஒன்றிய தலைவர் செந்தில்நாதன், நகரத்தார் பள்ளிகளின் செயலர் ராமநாதன், ரோட்டரி சங்க தலைவர் அமலன் அசோக் ஒவியப்போட்டிகளின் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். சாரதா நிகேதன் மகளிர்கல்லூரி முதல்வர் செல்வராணி முதலிடம் பெற்ற பள்ளிகளுக்கு கேடயம் வழங்கி பேசினார். சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் அருணாசலம், நகரத்தார் பள்ளி தலைமையாசிரியர் கணேசன், அபிராமி கண்ணன், பங்கேற்றார்.

source : Dinamalar