Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டி பள்ளியில் குழந்தைகள் தின விழா  Nov 17, 11
 
கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் பள்ளியில், திங்கள்கிழமை குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தின விழாவாக பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு, கீழச்சிவல்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் எஸ்.எம். பழனியப்பன் வரவேற்றார்.