Nagaratharonline.com
 
சபரிமலை சிறப்பு பஸ்: இணையதளத்தில் முன்பதிவு  Nov 15, 11
 
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகரவிளக்கு திருவிழாவின்போது பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது.
இந்த ஆண்டு புதன்கிழமை (நவம்பர் 16) முதல் 20.1.2012 வரை சென்னை, திருச்சி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பயணிகளின் வசதிக்காக 30 நாட்களுக்கு முன்னதாக www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.