Nagaratharonline.com
 
காரைக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு  Nov 12, 11
 
ஆவின் பாக்கெட் பாலை வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பதால், காரைக்குடியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காரைக்குடி ஆவின் மூலம், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் 32 பூத்களில் தினமும் 25 ஆயிரம் லிட்டர் பால் (ஒரு லிட்டர் ரூ.25 க்கு) விற்கப்படுகிறது.

தனியார் பால் ஒரு லிட்டர் 35 ரூபாய் வரை விற்கிறது. ஆவின் பால் லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைவாக இருப்பதால், காரைக்குடியில் ஆவின் பாலை அதிகம் வாங்குகின்றனர். ஏஜன்ட்கள் மூலம் பூத்திற்கு போதிய அளவு பாக்கெட் சப்ளை செய்யப்படுகிறது. எனினும், பாலிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு பாக்கெட்டிற்கு ரூ.2.50 லாபம் கிடைப்பதால், சிலர் மொத்தமாக பால் பாக்கெட்களை கடத்தி, டீக்கடைகளுக்கு விற்று விடுகின்றனர்.

source : Dinamalar