Nagaratharonline.com
 
கானாடுகாத்தான் ஐ.ஓ.பி. வங்கிக் கிளையில் ஆதார் அட்டைக்கு பதிவு செய்யும் பணி தொடக்க விழா  Nov 12, 11
 
கானாடுகாத்தான் ஐ.ஓ.பி. வங்கிக் கிளையில் ஆதார் எனும் தனித்துவ அடையாள அட்டை வழங்கும் திட்டத்துக்கான பதிவு செய்யும் பணி மாவட்டத்தில் முதல் முறையாக புதன்கிழமை தொடங்கியது.

இந்தத் திட்டமானது சாதாரண மனிதனுக்கான வலுவான அடையாளம் கிடைக்கும். குறிப்பாக அடையாளத்துக்கு எந்தவித நிரூபணமும் இல்லாதவர்களுக்கு இது உதவும். ஆதார் 12 இலக்க எண்ணாக இருக்கும். 5 வயது குழந்தை முதல் முதியவர்வரை அனைவரும் அடையாளம் பெற முடியும். இதற்கென வழங்கப்படும் தனிப்பட்ட எண் நாடு முழுவதும் செல்லத்தக்கது. இதனால் நண்மைகள் பெறுவது எளிது. இந்தச் சான்று அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். முகவரி, வயதுச்சான்றுடன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பதிவு செய்து கொண்டால் 90 நாள் களிலிருந்து 120 நாள்களுக்குள் வீடு தேடி ஆதார் அட்டை வந்து சேர்ந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆதார் அட்டைக்காக தங்களைப் பதிவு செய்துகொண்டனர்.

source : Dinamani