Nagaratharonline.com
 
கேபிள் டி.வி. கட்டணம் ரூ.70-க்கு மேல் வசூலித்தால் நடவடிக்கை: தமிழக அரசு  Nov 11, 11
 
அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர்ந்துள்ள ஆபரேட்டர்கள், பொது மக்களிடம் இருந்து மாதக் கட்டணமாக ரூ.70-க்கு மேல் வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்பு:

அரசு நிர்ணயித்த தொகையான ரூ.70-க்கு மேல் சந்தாதாரர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது. அவ்வாறு வசூலிப்பது தெரிய வந்தால், அத்தகைய ஆபரேட்டர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.