Nagaratharonline.com
 
MRF நிறுவனத்துக்கு ஆள் தேர்வு  Nov 11, 11
 
பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் அருகே உள்ள எம்.ஆர்.எஃப். நிறுவனத்துக்கு பயிற்சியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
18 முதல் 25 வயதுக்கு உள்பட்ட பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும், தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்றவர்களும், பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் மட்டும் தகுதியானவர்கள்.
மனுதாரர் 5 அடி 6 அங்குல உயரமும், 50 கிலோ எடையும் இருக்க வேண்டும்.
பயிற்சிக் காலம் 3 ஆண்டுகள். பயிற்சியின்போது மாதம் ஒன்றுக்கு ரூ.4,700 ஸ்டைபண்டு வழங்கப்படும்.
இப் பயிற்சியில் சேரத் தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் 19.11.11 சனிக்கிழமை காலை 11 மணிக்கு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே உள்ள அரு. நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளியில் நடைபெறும் வளாகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.