Nagaratharonline.com
 
காரைக்குடியில் நாகலிங்க பூக்கள்  Nov 26, 09
 
சிவ பூஜைக்கு உகந்த நாகலிங்க பூ, காரைக்குடி பொய் சொல்லா மெய்யர் தெருவில் அதிகளவில் பூத்துள்ளது.
லிங்க வடிவில் காணப்படும் பூவின் அடிப்பகுதியில் ஆறு இதழ்கள், மேலே ஐந்து தலை நாகம் குடையாக இருப்பது போல் இருக் கும். ஆண்டுதோறும் பூத் தாலும், சமீபத்திய மழையால் இங்கு அதிகளவில் காணப்படுகிறது. இப்பகுதியை சேர்ந்த முத்தாத்தாள் கூறுகையில், ""80 ஆண்டுகளுக்கு மேலாக இம்மரம் உள்ளது. நீண்ட தூரம் பயணிப்போர் இப்பூவை வாகனத்தின் முன் வைத்து கொள்வர். இம்மரத்தை சுற்றுலா பயணிகள் அதிகளவில் பார்த்து செல்கின்றனர்' என்றார்.

source : Dinamalar 27/11/09