Nagaratharonline.com
 
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை சிறப்பு முகாம்  Nov 4, 11
 
"வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நாளை சிறப்பு முகாம் நடைபெறும்' என, தமிழக தலைமை தேர்தல்அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அடுத்த ஆண்டு, ஜன., 1ம் தேதியை, தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி, நாளை காலை 10 மணி முதல் 5 மணி வரை, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடைபெறும்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் ஆகியவற்றைச் செய்ய விரும்புவோர், அதற்குரிய படிவங்களை, இம்முகாமில் பெறலாம்.புதிதாகப் பெயர் சேர்க்க விரும்பும், 18 முதல் 25 வயதிற்குட்பட்டோர், தங்கள் விண்ணப்பத்துடன், ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட், டெலிபோன் பில், மின் கட்டண அட்டை ஆகியவற்றில், ஏதேனுமொரு நகலுடன், பிறப்பு சான்றிதழின்நகலையும் இணைத்துத் தர வேண்டும்.பெயர் நீக்கத்திற்கு, இறப்புச் சான்றிதழின் நகல் அவசியம்

source : Dinamalar