Nagaratharonline.com
 
காரைக்குடியில் திருமண பதிவிற்கு கூடுதல் கட்டணம் வசூல்  Nov 2, 11
 
ய்த நாள் : நவம்பர் 02,2011,22:26 IST
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டண சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமண பதிவு சான்றுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது.
காரைக்குடியில் செஞ்சை, முத்துப்பட்டணத்தில் சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இடம் தொடர்பான கிரய பத்திரம், பிறப்பு, இறப்பு பதிவு சான்று, சொத்து வில்லங்க சான்று, திருமண பதிவு போன்றவற்றிற்காக தினமும் 300க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். சில நாட்களாக திருமண பதிவிற்காக முத்துப்பட்டண அலுவலகத்திற்கு வரும் புதுமண தம்பதிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தவிர, ஆவணங்களில் ஏதாவது ஒரு குறையை காட்டி, 120 ரூபாய் பதிவு கட்டணத்திற்கு 1500 ரூபாய் கேட்கின்றனர். பதிவு முடிந்து 3 நாட்களில் சான்று வழங்க வேண்டும். ஆனால், பல காரணங்களை கூறி, நீண்ட நாட்கள் இழுத்தடிக்கப்படுகிறது.

source : Dinamalar