Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்  Oct 29, 11
 
பொன்னமராவதியில் சுமை ஆட்டோவில் கடத்தப்பட்ட 450 கிலோ ரேஷன் அரிசி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
பொன்னமராவதி இந்திராநகர் பகுதியில் வட்ட வழங்கல் அலுவலர் இரா. மோகன்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சுமை ஆட்டோவில் 450 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த அரிசியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆட்டோவில் வந்த ஓட்டுநர் சபீர்முகமது, எம். கண்ணன் ஆகியோரைக் கைது செய்து பொன்னமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

source : Dinamani