Nagaratharonline.com
 
காரைக்குடி: சிதம்பரம் பதவி விலக பா.ஜ., கோரிக்கை  Nov 24, 09
 
சிதம்பரம் பதவி விலக பா.ஜ., கோரிக்கை


காரைக்குடி: லிபரான் கமிஷன் அறிக்கை வெளியானதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதவி விலக வேண்டும் என பா.ஜ., மாநில துணை தலைவர் எச். ராஜா கூறினார். அவர் கூறியதாவது: கூட்ட தொடர் நடக்கும் போது லிபரான் கமிஷன் அறிக்கையை பத்திரிகைகளில் கசிய விட்டிருப்பது பார்லிமென்ட் உரிமை மீறல் ஆகும். விலைவாசி உயர்வு, மவோயிஸ்ட், பயங்கரவாதிகள் தாக்குதலால் உள்நாட்டு பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக உள்ளது. இவற்றை கண்டித்து பா.ஜ., வினரோடு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், கம்யூ., கட்சிகள் இணைந்து கேள்வி எழுப்பின.




இதை சந்திக்க முடியாத மத்திய அரசு, எதிர்கட்சிகளின் ஒற்றுமையை குலைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஜார்கன்ட் தேர்தலில் வாக்காளர்களை திசை திருப்ப லிபரான் கமிஷன் அறிக்கையை கசியவிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் சிதம்பரம் பாதுகாப்பில் இருந்த ஆவண ரகசியம், கசிவதற்கு அமைச்சகமே பொறுப்பேற்க வேண்டும். அறிக்கையில் என்ன உள்ளது என யாருக்கும் தெரியாது. அறிக்கை வெளியானதற்கு பொறுப்பேற்று சிதம்பரம் பதவி விலக வேண்டும்,'' என்றார்.

Source: Dinamalar 24/11/09