Nagaratharonline.com
 
பழ.கருப்பையா கார் உடைப்பு: இருவர் கைது  Oct 19, 11
 
சென்னை,அக்.19: சென்னை ராயப்பேட்டையில் பழ.கருப்பையா கார் கண்ணாடியை உடைக்கப்பட்ட வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டது:

துறைமுகம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழ.கருப்பையாவின் வீடு, ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை பெசன்ட் தெருவில் உள்ளது. கடந்த 17-ம் தேதி பழ.கருப்பையா தனது வீ்ட்டு முன்பு காரை நிறுத்திவிட்டு, வீட்டுக்குள் இருந்தார். அப்போது அங்கு வந்த தி.மு.க.வினர் அவரது கார் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடினர்.

இது குறித்து கருப்பையா, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.

விசாரணையில் தி.மு.க.வைச் சேர்ந்த ராயப்பேட்டை தோமையன் தெருவைச் சேர்ந்த கணேஷ் (39),திவாகர் (20) ஆகிய இருவரும்தான் கருப்பையாவின் கார் கண்ணாடியை உடைத்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Source:Dinamani