Nagaratharonline.com
 
சிவ​கங்கை: ஷீல்டு கால்​வா​யில் பெரி​யாறு நீர் திறக்க வலி​யு​றுத்​தல்  Nov 23, 09
 
ஷீல்டு கால்​வா​யில் பெரி​யாறு நீர் திறக்க வலி​யு​றுத்​தல்


சிவ​கங்கை,​ நவ,​20:​ ஷீல்டு கால்​வாய் சீர​மைப்​புப் பணி​களை விரை​வாக முடித்து தண்​ணீர் திறந்து விட நட​வ​டிக்கை எடுக்​கு​மாறு குண​சே​க​ரன் எம்​எல்ஏ மாவட்ட நிர்​வா​கத்தை வலி​யு​றுத்​தி​யுள்​ளார்.

​ ​ சிவ​கங்கை மாவட்​டத்​தில் பெரி​யாறு நேரடி பாச​னக் கால்​வா​யான ஷீல்டு கால்​வாய் சீர​மைப்​புப் பணி​கள் ரூ 5.4 கோடி செல​வில் நடை​பெ​று​கின்​றன. இந்த கால்​வாய் மூலம் 42 கண்​மாய்​க​ளுக்கு தண்​ணீர் நிரம்​பும். 1750 ஏக்​கர் நிலம் பாசன வசதி பெறும்.

இக் கண்​மாய் சீர​மைப்​புப் பணி​களை சிவ​கங்கை சட்​ட​மன்ற உறுப்​பி​னர் குண​சே​க​ரன் வெள்​ளிக்​கி​ழமை பார்​வை​யிட்​டார்.

​ ​ ​ ​ அவ​ரு​டன் விவ​சாய ​ சங்​கப் பொறுப்​பா​ளர்​கள் என். ரெகு​நா​தன்,​ என்.லட்​சு​ம​ணன்,​ எம்.சந்​தி​ரன் மற்​றும் சீல்டு கால்​வாய் பாசன சங்​கத் தலை​வர் அர்ச்​சு​னன் ஆகி​யோ​ரும் சென்​ற​னர். ​ இத​னைத் தொடர்ந்து ஷீல்டு ​ கால்​வாய் பணி​களை விரை​வு​ப​டுத்தி பெரி​யாறு தண்​ணீர் திறக்க உட​னடி நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என்று மாவட்ட ஆட்​சி​யர்,​ பெரி​யாறு பாசன தலைமை பொரி​யா​ளர் ஆகி​யோ​ருக்கு குண​சே​க​ரன் எம்​எல்ஏ கோரிக்கை விடுத்​துள்​ளார்.​​​ ​

Source: Dinamani 23/11/09