Nagaratharonline.com
 
கண்டனூரில் எலுமிச்சை விநாயகர்  Oct 17, 11
 
கண்டனூரைச் சேர்ந்தவர் விஆர்.ராமசாமி செட்டியார்.இவரது வீட்டு தோட்டத்தில் எலுமிச்சை மரத்தில் வித்யாசமான தோற்றத்தில் காய் ஒன்று காய்த்திருந்தது. இதை பறித்து பார்த்தபோது "விநாயகர்' போல் துதிக்கை (தும்பிக்கை) வளைந்து இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். இதை கர்ப்பக விருட்சகமாக நினைத்து அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு கொண்டு சென்றார். கோயில் " டிரஸ்டி' சொக்குசுப்பிரமணியன் ஆலோசனையின் பேரில் வீட்டில் வைத்து பூஜித்து வருகிறார்.