Nagaratharonline.com
 
காரைக்குடியில் ரூ.1 லட்சம் நகை கொள்ளை  Oct 16, 11
 
காரைக்குடி டி.டி.,நகர் 2வது வீதியை சேர்ந்தவர் சிவராமன், 36. கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிதி நிறுவன மேலாளர். குடும்பத்துடன் அங்கு வசிக்கிறார். விடுமுறைக்காக அவ்வப்போது இங்கு வந்து செல்வார்.

நேற்று முன் தினம் இரவு கோவையில் இருந்து காரைக்குடி வந்தார். வீட்டிற்கு வந்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. போலீசார் உதவியுடன், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, மர்ம நபர்கள் இவரது வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள 4 பவுன் தாலி செயின், 400 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. காரைக்குடி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரிக்கிறார்.

source : Dinamalar