Nagaratharonline.com
 
கோயம்பேடில் பஸ்கள் சிறைபிடிப்பு  Oct 15, 11
 
வருகிற 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களில் வாக்களிப்பதற்காக செல்ல விரும்பினர். இதற்காக சென்னை கோயம் பேடில் வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

சுமார் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த போதிலும் போதிய அளவிற்கு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகத்தினர் முன் வராததை கண்டித்து நான்கிற்கும் மேற்பட்ட பஸ்களை சிறைபிடித்தனர்.

source : Dinamalar