Nagaratharonline.com
 
சிதம்பரம் நடராஜர் கோவில் வசூல் ரூ.1 கோடி  Oct 14, 11
 
சிதம்பரம் நடராஜர் கோவில் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உண்டியல்கள் வைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்படுகிறது.

நேற்று இதுவரை இல்லாத அளவில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 279 ரூபாய் முதல் முறையாக 60 கிராம் தங்கம், 77 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 1,100 அமெரிக்க டாலர், 311 மலேசியா ரிங், 20 சிங்கப்பூர் டாலர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணம் இருந்தது. பிரசாத கடை ஏலம் மற்றும் பக்தர்கள் நேரிடையாக காணிக்கை செலுத்தியது என மொத்தம் 1 கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நடராஜர் கோவில் மூலம் அரசுக்கு வருமானம் வந்துள்ளது.

source : Dinamalar