Nagaratharonline.com
 
பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை  Oct 14, 11
 
பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் ஏக தின லட்சார்ச்சனை விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை காலையில் மகா சுதர்ஸன ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமிக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.
பின்னர் சுவாமிக்கு விஷேச தீபாராதனையும், நட்சத்திர தீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை லட்சார்ச்சனை விழாக் குழுத் தலைவர் ஆர்.எம். பழனியப்பன், செயலர் எம். சுகுமார், பொருளாளர் ஆர்.எம். மணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

source ; Dinamani