Nagaratharonline.com
 
திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் "சிடி' விற்பனை,காலணிக்கு கட்டாய வசூல் :கலெக்டர் தடை  Oct 14, 11
 
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி கோயிலுக்குள் "சிடி' விற்பனை ஏலம் மற்றும் காலணிக்கு கட்டாய வசூல் செய்ய தடை விதித்து கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார். கோயிலுக்குள் "சிடி'க்கள் விற்பனை செய்வதற்கான ஏலத்தை தடுக்க கலெக்டர் சகாயத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கோயிலுக்குள் "சிடி'க்கள் விற்பனை செய்ய ஏலமிட இருந்தது தெரிய வந்தது. இந்த ஏலத்தை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.கோயிலில் காலணிகளை பாதுகாக்கும் மகளிர் சுயஉதவிக்குழு கட்டாய வசூல் செய்வதாகவும் புகார் சென்றன. சுபம் மகளிர் சுயஉதவிக்குழு இதனை ஏலம் எடுத்துள்ளது. காலணிக்கு கட்டாய வசூல் செய்யவும் கலெக்டர் தடை விதித்தார்.

source : Dinamalar