Nagaratharonline.com
 
கல்லல் மாணவர்களுக்கு வாந்தி சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாததால் பாதிப்பு  Oct 13, 11
 
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 131 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று செம்பனூர் வட்டார மருத்துவமனையிலிருந்து வயிற்று பூச்சிக்கு மாத்திரை கொடுத்துள்ளனர். மாத்திரை கொடுக்கும் முகாமிற்கு டாக்டர் இல்லாமல் நர்ஸ்கள் மட்டும் சென்றுள்ளனர். மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 5ம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட 24 மாணவர்களுக்கு ஒவ்வாமையால் வாந்தி,மயக்கம் ஏற்பட்டது. பள்ளி தலைமையாசிரியராக பொறுப்பு வகிக்கும் அமல்ராணி அருகே உள்ள டாக்டர் மாதரசிக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் வந்து மாணவர்களுக்கு முதலுதவி அளித்து 24 மாணவர்களையும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர்.

செம்பனூர் வட்டார மருத்துவமனையில் 3 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். தற்போது 2 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். நேற்று ஒரு டாக்டர் விடுப்பிலும்,மற்றொருவர் கேம்ப் சென்றுள்ளார்.

source : Dinamalar