Nagaratharonline.com
 
திருப்பத்தூர்: இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா  Nov 23, 09
 
இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா


திருப்பத்தூர், நவ.22: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மருதிப்பட்டியில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

மருதிப்பட்டியில் நடைபெற்ற இவ்விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு இலவச எரிவாயு அடுப்புகளை 280 பேருக்கு வழங்கிப் பேசியது:

இந்த அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. பெரிய நகரங்களில் இருக்கும் வசதிகளைப் போல், அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி, குடிநீர் வசதி செய்து வருகிறோம்.

திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித்தொகை, அந்த வகையில் பெண்களுக்கு புகையினால் வரும் தொற்றுநோயைத் தடுக்க, இலவச எரிவாயு அடுப்பு, பள்ளிகளின் தரம் உயர்த்துதல் ஆகியவைகளைச் செய்து வருகிறோம். நமது மாவட்டத்தில் மட்டும் ஆறு மேல்நிலைப் பள்ளிகளும், ஆறு நடுநிலைப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன எனறு அவர் பேசினார். விழாவில் மருதிப்பட்டி ஊராட்சித் தலைவர் அடைக்கப்பன், திருப்பத்தூர் வட்டாட்சியர் விஜயராணி, மாவட்ட கவுன்சிலர் கதிர்காமம், சந்திரசேகர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Source:Dinamani 23/11/09