Nagaratharonline.com
 
பூட்டிய வீட்டுக்குள்ளும் பணம் காரைக்குடி வாக்காளர்கள் "குஷி'  Oct 10, 11
 
காரைக்குடியில் சில இடங்களில் ஆளில்லாமல் பூட்டி கிடக்கும் வீடுகளிலும் நோட்டீசுடன், பணம் போடப்படுகிறது. காரைக்குடியில் 36 நகராட்சி கவுன்சிலருக்கு 213 பேர் போட்டியிடுகின்றனர். அனைத்து வார்டுகளிலும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஒரு சிலர் எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வீடு தவறாமல் பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். இதில், 33 வது வார்டில் வேட்பாளர் ஒருவர் நோட்டீசில், இரண்டு 100 ரூபாய் நோட்டை வைத்து "பின்' செய்து வீடு, வீடாக கொடுத்துள்ளார். ஆளில்லாமல் பூட்டிக்கிடக்கும் வீட்டு கதவுகளில் "சொருகி' விட்டு சென்று விடுகின்றனர். இதேபோல், 8 வது வார்டிலும் பண பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் இந்த நிலை தொடர்கிறது.

source ; dinamalar