Nagaratharonline.com
 
காரைக்குடியில் ஓட்டுக்கு ஜவுளி "டோக்கன்'  Oct 8, 11
 
காரைக்குடியில் ஓட்டுக்களை கவர, தீபாவளியை முன்னிட்டு வாக்காளர்களுக்கு ஜவுளி கடையில் துணி எடுத்துக் கொள்ள "டோக்கன்' வழங்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி தலைவர் பதவி, கவுன்சிலருக்கு மொத்தம் 221 பேர் போட்டியிடுகின்றனர்.இங்கு "மும்முனை' போட்டி ஏற்பட்டுள்ளது.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை கவர, இலவசங்களை அள்ளி வீசி ஆதரவு திரட்டி வருகின்றனர். வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு தற்போது பண பட்டுவாடாவுடன், தீபாவளியை முன்னிட்டு ஜவுளி கடையில் துணி எடுத்துக் கொள்ள "டோக்கன்' வழங்கப்படுகிறது. குறிப்பாக, பெண்களை குறி வைத்து, குடும்பத்திற்கு ஏற்றாற்போல் ரூ.1000 முதல் 3000 வரை மதிப்புள்ள டோக்கன் வழங்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது.

source : Dinamalar