Nagaratharonline.com
 
மீனாட்சியம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு  Oct 7, 11
 
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 108 வீணைகள் வழிபாடு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் நடப்பாண்டில் பல லட்சம் ரூபாய் செலவில் கொலு அமைக்கப்பட்டிருந்தது.
மீனாட்சியம்மன் வரலாறு, திருவிளையாடல் புராண அடிப்படையிலான சுவாமி மொம்மைகள் என பக்தர்களது மனம் கவரும் வகையில் கொலு அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிகழ்ச்சிக்கு சிகரம் வைத்ததுபோல வியாழக்கிழமை மாலை வீணை வழிபாடு நடைபெற்றது.

திருக்கோயிலின் பழைய சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 106 மகளிரும், 2 ஆடவரும் சேர்ந்து வீணையை வாசித்தனர். சுமார் இரண்டு மணி நேரம் வீணைக் கச்சேரி நடைபெற்றது. இதை, பக்தர்கள் ஆர்வமுடன் கேட்டு ரசித்தனர்.

source : Dinamani