Nagaratharonline.com
 
தீபாவளியில் காப்புக்கட்டுடன் கந்தசஷ்டி விழா துவக்கம்  Oct 4, 11
 
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தீபாவளியன்று காப்புகட்டுடன் துவங்குகிறது.


வழக்கமாக தீபாவளி மறுநாள் அல்லது அதற்கடுத்த நாள் விழா துவங்கும். இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 9 மணிக்கு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும், தொடர்ந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் காப்பு கட்டப்படும். விழா முக்கிய நிகழ்ச்சியாக அக்., 30 ல் வேல்வாங்குதல், அக்., 31ல் சூரசம்ஹாரம், நவ., 1 காலையில் சட்ட தேரோட்டம், மாலையில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளி கவசங்கள் சாத்துப்படியாகி, பாவாடை நைவேதன தரிசனம் நடக்கிறது.

source : Dinamalar