Nagaratharonline.com
 
கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு  Sep 28, 11
 
தேவகோட்டை, செப். 27: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவின்போது ராமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, 18-வது ஆண்டாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில், பொற்கிழி கவிஞர் அரு. சோமசுந்தரன் உரை நிகழ்த்தினார். நீலா, தையல்நாயகி, பிரபாவதி, நாராயணன் ஆகியோர் ராமாயணப் பாடல்களை இறைவணக்கமாக பாடினர். காசிநாதன் வரவேற்றார். ஜமீன்தார் நாராயணன் செட்டியார் தலைமை வகித்தார்.