Nagaratharonline.com
 
Sep 23ல் துபாயில் நகரத்தார் சங்கத்தின் 135-வது கூட்டம்  Sep 23, 11
 
துபாய்: துபாயில் ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் 135-வது கூட்டம் வரும் 23-ம் தேதி காலை 10.30 மணிக்கு அல் கிஸஸ் டியூன்ஸ் ஹோட்டல் அபார்ட்மெண்டில் நடைபெறுகிறது.

இக்கூட்டம் செல்வி நந்தினி சரவணினின் கடவுள் வாழ்த்துடன் துவங்குகிறது. இதில் வினாடி வினா, சிறுகதை எழுதும் போட்டி, பேஷன் ஷோ, விவாத மேடை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பும் நகரத்தார் அழகப்பன் 050 569 3978 / மணிகண்டன் 050 271 2949 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Source: Thatstamil