Nagaratharonline.com
 
கிலோ மல்லிகை ரூ. 1000  Dec 25, 10
 
மதுரை, டிச. 24: பனிப்பொழிவால் வரத்துக் குறைந்ததால், மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ, பிச்சிப்பூ ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் கிலோ ரூ.500 விற்ற மல்லிகைப்பூ, வெள்ளிக்கிழமை கிலோ ரூ.1000 விற்றது.

தற்போது ஐயப்பன், முருகனுக்கு பலர் மாலையிட்டு விரதமிருந்து வருகின்றனர். கோயில்களில் பூஜைகள் அதிகளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பனிக்காலம் மற்றும் உற்பத்திக் குறைவு பூக்களின் விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


source : Dinamani