Nagaratharonline.com
 
பாகனேரி : இஷ்டத்திற்கு வரும் டவுன் பஸ்களால் அவதி  Dec 13, 10
 
சிவகங்கை - பாகனேரி இடையே உரிய நேரத்திற்கு டவுன் பஸ்கள் இயக்கப்படாததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இங்கு, 5 வழித்தடங்கள் பஸ்கள் இயங்குகின்றன. இந்த டவுன் பஸ்களில் தான் பாகனேரி, காடனேரி, நகரம்பட்டி, வீழனேரி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மாணவர்கள், ஊழியர்கள், விவசாயிகள் சிவகங்கை சென்று வருகின்றனர்.தினமும் காலை 6.45 மணிக்கு சென்று; இரவு 7 மணி வண்டிக்கு கிராமத்திற்கு வருகின்றனர். ஆனால், இந்த நேரங்களில் பஸ்கள் சரியாக வருவதில்லை. இரவு 9மணிக்கு மேல் காலதாமதமாக பஸ்கள் வருவதால், பள்ளி விட்டு வீட்டிற்கு வரமுடியாமல் மாணவிகள் தவிக்கின்றனர். பஸ்களை சரியான நேரத்திற்கு இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்

source : Dinamalar