Nagaratharonline.com
 
10 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய திருக்கோஷ்டியூர் தெப்பக்குளம்  Dec 2, 10
 
சவுமிய நாராயண பெருமாள் கோயில் தெப்பக்குளம், கிராமத்தினர் முயற்சியால், 10 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது.இக்குளம் தி.வைரவன்பட்டியில் உள்ளது. கடம்பான் கண்மாயிலிருந்து நீர் வரும். கடந்த 10 ஆண்டுகளாக வரத்து கால்வாய்கள் பராமரிக்கப்படவில்லை. இருப்பினும் கோடை காலத்தில் கூட ஓரளவு தண்ணீர் இருக்கும். தெப்ப திருவிழாவுக்கு குடிநீர் குழாய், பம்ப் செட் மூலம் குளத்தை நிரப்பி சமாளித்து வந்தனர்.

தொடர் மழையால் குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, நேற்று நிரம்பியது

source : Dinamalar