Nagaratharonline.com
 
திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்டில் மழையில் நனையும் பயணிகள்  Oct 27, 17
 
திருப்புத்துார் நகரில் நேற்று காலை 8:30 மணி அளவில் நல்ல மழை பெய்யத் துவங்கியது. அப்போது பஸ்களில் வந்திறங்கிய மாணவ,மாணவிகள், ேவலைக்கு செல்வோர் என்று பலரும் இறங்கியவுடன் நனைந்தவாறே கூரையை
தேடி ஓடினர். கடைகளுக்கு முன்பாக இருந்த சிறிய தாழ்வாரங்களில் நின்று நனையாமல் தப்பிக்க முயன்றனர். ஆனால் நிற்க இடமில்லாததால் நனைந்தபடியே
பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறினர்.
வெளியூர் செல்லும் பயணிகள் நனைந்தபடியே பஸ்களில் ஏறினர். .

முக்கியமான நகராக இருந்தும் திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட்டில் போதுமான வசதிகள் இல்லை. பிள்ளையார்பட்டி, மதகுபட்டி போன்ற கிராம ஊராட்சி பஸ் ஸ்டாண்ட்களில்பயணிகளுக்கு உள்ள வசதிகள் கூட திருப்புத்துார் தேர்வுநிலை பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் இல்லை . இந்தப் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.