Nagaratharonline.com
 
வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம்: ரிசர்வ் வங்கி விளக்கம்  Oct 21, 17
 
வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் படி, வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், 2017 ஜூன் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. அந்த விதிமுறைகள் அப்படியே அமலில் உள்ளன. எனவே, வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.