Nagaratharonline.com
 
NEWS REPORT: தாம்பரம்- - - செங்கோட்டை ரயில் (திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக) ஒரு மாதம் நீட்டிப்பு  Sep 29, 17
 
சென்னை தாம்பரம் முதல் செங்கோட்டை வரை இயக்கப்பட்ட சிறப்பு ரயில், வருகிற அக்.31 வரை , நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அக்.2-ம் தேதியிலிருந்து தாம்பரத்தில் காலை 6:00 மணிக்கு புறப்பட்டு, காரைக்குடிக்கு பகல் ஒரு மணிக்கும், மாலை 6 :00 மணிக்கு செங்கோட்டைக்கும் சென்று சேரும். மறு மார்க்கத்தில் காலை 6:15 மணிக்கு செங்கோட்டையில் புறப்பட்டு 10:40 மணிக்கு காரைக்குடிக்கு வந்து சேரும். இரவு 7:00 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
தாம்பரம் - செங்கோட்டைக்கு வாரத்தில் ஞாயிறு செவ்வாய் தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும். செங்கோட்டை - தாம்பரத்துக்கு திங்கள், புதன் கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படுகிறது.
வாரம் ஐந்து நாள் ஓடும் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து அக்.30 வரையும், செங்கோட்டையிலிருந்து அக்.31 வரையும் இயக்கப்படும்.
செங்கல்பட்டு, மேல்மருவத்துார், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலுார், ஸ்ரீரங்கம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, திருவில்லி புத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடைய நல்லுார், தென்காசி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு கடந்த புதன் முதல் தொடங்கியுள்ளது.