Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டை பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு  Sep 28, 17
 
நாட்டரசன்கோட்டை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் லதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாட்டரசன்கோட்டை பேரூராட்சி உரக்கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியை பார்வையிட்டார். அப்போது வீடுகளில் உள்ள குப்பைகளை வாங்கும்போதே மக்கும் குப்பை எனவும், மக்காத குப்பை எனவும் பிரித்து வாங்க வேண்டும் என்றும், மழைக்காலத்தில் நீர்நிலைகளில் மீன் குஞ்சுகளை வளர்த்து உபரி வருமானம் கிடைப்பதற்கு வழி வகுக்க வேண்டும் என்றும் கூறினார்