Nagaratharonline.com
 
தேவகோட்டை ஊரணிகளில் கலக்கும் கழிவுநீர்  Aug 19, 17
 
தேவகோட்டை நகரில் 14 ஊரணிகள் உள்ளன. எல்லாமே கோயில்களை ஒட்டியே உள்ளன. டெங்கு பரவி வரும் நிலையில் தேவகோட்டையில் உள்ள ஊரணிகள் அனைத்துமே சுகாதாரக் கேடாக உள்ளது.
அனைத்து ஊரணிகளுமே பயன்பாட்டில் இருக்கும் ஊரணிகள். கடந்தாண்டு மழை
பெய்யாத நிலையில் ஊரணிகள் வறண்டன. சமீபகாலமாக மழை பெய்வதால் எல்லா ஊரணிகளிலும் தண்ணீர் உள்ளது.
ஆனால் அனைத்திலும் செடி,கொடிகள் மண்டிகிடப்பதோடு, சில ஊரணிகளில் குப்பையை கொட்டியதால் சுகாதாரக்கேடாக உள்ளது.
தண்ணீர் வந்தவுடன் மக்கள் ஊரணிகளில் ஒரு பகுதியில் ஒதுக்கி தண்ணீரை பயன்படுத்துகிறார்கள். ஒரு சில ஊரணிகளில் கழிவுநீரும் கலக்கிறது.நகராட்சிக்கு சொந்தமான கருதாவூரணி புதர்மண்டி, குப்பை கிடங்காக உள்ளது.
நகராட்சி அதிகாரிகள் அனைத்து ஊரணிகளையும் பரா மரிக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.