Nagaratharonline.com
 
NEWS REPORT: பரியாமருதபட்டி சுயம்பு ஸ்ரீ பரியாமருந்தீஸ்வரர் ஆலய குடமுழுக்கு திருப்பணி - தச்சு செய்தல்  Jun 26, 17
 
 
 
சிவகங்கை சமஸ்தான ராணி ஸ்ரீ மதுராந்தகி நாச்சியார் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பரியாமருதபட்டியில், சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் பரியாமருதீஸ்வரருக்கு நெற்குப்பை இடிதாங்கி வீடு முரு .பழ குடும்பத்தார் ஆலயத்தை சிறப்பாக அமைத்து குடமுழுக்கு நடத்தினார்கள்.

அவர்கள் வாரிசுதாரர்கள். தொடர்ச்சியாக குடமுழுக்கு நடத்தி வந்தனர். குடமுழுக்கு நடத்தி 15 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், மறுபடியும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, 11/06/2017 அன்று காலை சுயம்பு ஸ்ரீ பரியாமருந்தீஸ்வரர் ஆலயத்தில் தச்சு செய்தனர்.

உறவினர்களும் ஊர் மக்களும் நாட்டார் நகரத்தார் பெருமக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இறைவன்:பரியாமருதீச்வரர்
இறைவி:பார்வதி
பிறசன்னதிகள்: பரஞ்சோதி
மரம்-மருத.
தீர்: குளம்

சிறப்புகள்:
நரிகளை பரிகளாக்கிய- பரியா மருதுபட்டி திருவிளையாடல் நடந்த தலம். சதுர்யுகம் கண்டமூர்த்தி. அருகில் சேவுகப் பெருமாள் ஐயனார்- காவல் தெய்வம்.