Nagaratharonline.com
 
சிவகங்கை மாவட்டத்தில் அங்கீகாரமற்ற மனைப்பிரிவை முறைப்படுத்த வாய்ப்பு  May 25, 17
 
சிவகங்கை மாவட்டத்தில் அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவித்து முறைப்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
கலெக்டர் மலர்விழி கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் நகரமைப்புத்துறை அங்கீகாரம் இல்லாமல் வீட்டுமனை வாங்கியோர் முறைப்படுத்தி கொள்ள வழிமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர் ஊரகமைப்புத்துறை அனுமதி பெற்றவை மட்டுமே
அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளாக கருதப்படும்.

கட்டட அனுமதியும் பெற முடியும். இவ்வாய்ப்பை தவறவிட்டால் மின்சார, குடிநீர், வடிகால் வசதி பெற முடியாது. அனுமதியற்ற மனைப்பிரிவை பதிவுச் சட்டம் 1908 ன் படி பத்திரப்பதிவு செய்ய இயலாது.
மனைப்பிரிவு விபரங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் தெரிவித்து முறைப்படுத்தி கொள்ளலாம், என்றார்.