Nagaratharonline.com
 
திருப்புத்தூரில் ரிசர்வேஷன் மையம் மூடல்: டிக்கெட் பதிய முடியாமல் பயணிகள் தவிப்பு  May 3, 17
 
திருப்புத்துாரில் ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் மையம் மூடப்பட்டு விட்டதால் ரயில் பயணிகள் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரயில் பாதை அமைக்கும் திட்டம்
தான் கை விடப்பட்டது என்றால், டிக்கெட் முன்பதிவு மையமும் கைவிடப்பட்டது திருப்புத்துார் ரயில் பயணிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரயில்வேத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து அரசு பொதுச்சேவை மையத்திற்கு அந்த வசதியை அளிக்க முன்வர வேண்டும் என்று பயணிகள் கோரியுள்ளனர்.