Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் ஸத்குரு தியாகராஜ சுவாமிகள் 24 ஆம் ஆண்டு ஆராதனை மற்றும் தமிழிசை விழா  Mar 6, 17
 
பொன்னமராவதியில் ஸத்குரு தியாகராஜ சுவாமிகள் 24ம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் தமிழிசை விழா சனிக்கிழமை தொடங்கியது.

சனி மற்றும் ஞாயிறு இருநாள்கள் நடைபெற உள்ள விழாவின் தொடக்கமாக காலை மங்கள இசை மற்றும் கணபதி ஹோமம் நடைபெற்றது. பொன்.புதுப்பட்டி ராமாயண மண்டபத்தில் இருந்து தியாகராஜ சுவாமிகள் பட ஊர்வலம் நடைபெற்றது. முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆர்எம்.ராஜா தொடங்கி வைத்தார். வலையபட்டி ஏஆர்.கதிரேசன், புதுப்பட்டி பிஎல்.சுப்பிரமணியன், எஸ்.மனோகரன் ஆகியோரின் இசை முழங்க சென்ற ஊர்வலம் மங்கைநாயகர் மண்டபத்தில் நிறைவுற்றது.

தொடர்ந்து நடைபெற்ற விழாவை உடுப்பி என்.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடக்கமாக புதுக்கோட்டை மாரி நாட்டியப்பள்ளி குழுவினரின பரதநாட்டியம் நடைபெற்றது. நெம்மாரை சகோதரர்கள் என்ஆர்.கண்ணன், என்ஆர்.ஆனந்த் ஆகியோரின் சிறப்பு நாதஸ்வர கச்சேரி, திருக்கடையூர் டிஜி.பாபு, மேட்டுப்பாளையம் எம்எஸ்.ரவிக்குமார் ஆகியோரின் சிறப்புத்தவில் நடைபெற்றது. ஏற்பாடுகளை தலைவர் எஸ்.பரமேஸ்வர குருக்கள், உபதலைவர் எஸ்.தியாகராஜ குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.